Posts

Showing posts from 2018

தூங்காத இரவுகள் தரும் துயரம்

Image
தூங்காத இரவுகள் தரும் துயரம் நன்றி - அ. உமர் பாரூக் நம்மைச் சுற்றி ரசாயனப் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் போது நம்மை நாம் எவ்வாறு பாதுகாப்பது. ஒவ்வொரு உணவாக ஆய்வு செய்து அதிலிருக்கும் ரசாயன நஞ்சுகளை அறிந்து கொண்டு நாம் என்னதான் செய்வது. இயற்கை நம் உடலிற்கு வழங்கியுள்ள, ரசாயனங்களை அழிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி நாம் உண்ணும் உணவுகளின் நச்சுக் கலப்பிலிருந்து நம்மை காக்கலாம். உடலிற்குள் வரும் ரசாயனங்களை கண்டுபிடித்து அவற்றை நீக்கும் வேலையை செய்யும் கடவுள் யார் தெரியுமா... கல்லீரல் தான். குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று மற்றும் உணவின் வழியாக உடலுக்குள் நுழையும் ரசாயனங்களை அழிக்கும் சக்தி படைத்தது தான் கல்லீரல். உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்றான கல்லீரலை இப்போது இருப்பதை விட இன்னும் பல மடங்கு பலத்தோடு வைத்துக் கொண்டால் தானே நஞ்சுகளில் இருந்து தப்ப முடியும். அதற்கான வழிமுறைகள் எதுவும் இருக்கிறதா என்றால், நம் முன்னோர்கள் கடைபிடித்த முறையான வழி அது. ரசாயனங்களை அழிப்பதற்கான உடலியல் வழிகள் பல இருந்தாலும் முக்கியமானது... - சரியான நேரத்தில் துாங்குவது. இரவுக் காவலன் சரியான நேரம்

நோயில்லா மனிதன், மருந்தில்லா உலகினை நோக்கிய பயணத்தில் உங்களுடன் நானும்...!

Image
உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய/ மரபுமுறை மருத்துவங்களுக்கான அறிக்கையிலிருந்து...  நோயில்லா மனிதன், மருந்தில்லா உலகினை நோக்கிய பயணத்தில் உங்களுடன் நானும்...!

அதென்ன தொடு சிகிச்சை? தொடுவது என்பது எப்படி சிகிச்சையாகும்?

Image
அதென்ன தொடு சிகிச்சை? தொடுவது என்பது எப்படி சிகிச்சையாகும்? தொடு சிகிச்சை என்ற சொல்லைக் கேட்டவுடன் நமக்குத் தோன்றுகிற இந்தக் கேள்விகள் நியாயமானவை. நாம் அறிந்து வந்திருக்கிற மருத்துவ அறிவிற்குச் சற்றும் பொருந்தாத புதிய விஷயம் இப்படியான கேள்விகளை ஏற்படுத்தத்தான் செய்யும். தொடு சிகிச்சை என்பது புதிய மருத்துவ முறை அல்ல. அக்குபங்சர் என்ற மருத்துவத்தின் சிகிச்சை முறைதான் தொடுதல். அக்குபங்சர் என்றாலே உடல் முழுவதும் ஊசிகளைச் சொருகி, மின் தூண்டல் கருவிகளை இணைக்கும் ஒரு காட்சிதான் நம் நினைவிற்கு வரும். ஆனால் அக்குபங்சர் மருத்துவத்தின் அடிப்படையான முறை விரல் மூலம் அக்குபங்சர் புள்ளியைத் தொட்டு தூண்டுவதுதான். மனித உடலில் உள்ள ஒவ்வொரு முக்கியமான உள்ளுறுப்பிற்கும் தனித்தனியான சக்தி ஓட்டப்பாதைகள் அமைந்துள்ளன. இப்பாதைகளில்தான் அக்குபங்சர் புள்ளிகள் அமைந்துள்ளன. இப்புள்ளிகள் தோல் மூலம் சுவாசித்து உள்ளுறுப்புக்களுக்குத் தேவையான சக்தியை வழங்குகின்றன. இப்படி தோலில் அமைந்துள்ள புள்ளிகளின் மூலம் சுவாசம் முழுமையாக நடைபெறும் போது உடலில் தொந்தரவுகள் தோன்றுவதில்லை. நம்முடைய இயற்கைக்கு மாறான பழக்க வழக